Home » » MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்

MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்

Written By M.L on வெள்ளி, 19 ஏப்ரல், 2013 | ஏப்ரல் 19, 2013

MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்..

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது....

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது
...
பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்....... அவரிடம் கேட்டான்…

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்..,

MBA : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..

MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு.,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படிகண்டுபிடிப்பீங்க..?
__

__

__


விவசாயி: இதுக்குதான்தம்பி., நான் என் மாட்டைகாலேஜுக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category