Home » , , » பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மைச்

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மைச்

Written By M.L on புதன், 12 பிப்ரவரி, 2014 | பிப்ரவரி 12, 2014


பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மைச்
சம்பவம்...!

இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக்
கொண்டு இருக்கும் போது தவறுதலாக...
ஒரு கிணற்றில் விழுந்துவிட்டன.

அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய
முதலாளியை வர வைப்பதற்காக
கிணற்றின் அருகில் நின்று குரைத்துக்
கொண்டே இருந்தது.

சத்தம் கேட்டுக் கிணற்றை எட்டிப்
பார்த்த முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி.

தான் ஆசையாக வளர்த்த நாய் குட்டிகள்
கிணற்றில் விழுந்து கிடக்கின்றன அதன்
அருகில் பெரிய ராஜநாகம் படம்
எடுத்து ஆடிக் கொண்டு இருந்தது.

கிணற்றில் ஒரு பகுதி கரையும் மறு பகுதி தண்ணீரும்
இருந்தது.ராஜநாகம் நாய்
குட்டிகளை ஒன்றும்
செய்யவில்லை,நாய ் குட்டிகள் தண்ணீரில் இறங்காதவாறு காவல்
காத்து கொண்டு இருந்தது.

ராஜநாகம் மற்றும் நாய் குட்டிகள் 48
மணி நேரம் கிணற்றில் ஒன்றாக இருந்தன.இந்த 48 மணி நேரமும் நாய்
குட்டிகள் தண்ணீரில்
விழாதவாறு ராஜநாகம் அமைதியாக
காவல் காத்து கொண்டு இருந்தது.

பிறகு வனத்துறையினர் கிணற்றுக்குள்
இறங்கிய போது ராஜநாகம் மறு கரைக்கு சென்றது.நாய்
குட்டிகளை காப்பாற்றிய
வனத்துறையினர் அந்த
ராஜநாகத்தையும் காப்பாற்றி காட்டில்
விட்டனர்.

”அதிகம் விஷம் உடைய ஒரு ராஜநாகம்
இரண்டு சிறிய
உயிரனத்துக்கு தீங்கு விளைவிக்காமல்
பாதுகாப்பு கொடுக்கும் இந்த பூமியில் தான், சின்னஞ்சிறு குழந்தைகளையும்
சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம்
செய்யும் மனித மிருகங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது”
இதுபோன்ற உயிர்களிடத்தில்
இருந்தாவது நல்ல
பண்புகளை கற்று கொள்ளுங்கள் மனித
மிருகங்களே...!

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

General Category