எனது ஊரில் நடைபெற்ற.. ஒரு சம்பவம்....ஒரு அழகான இளம் பெண் ஒருவள்..நான் எங்கு சென்றாலும் என் கூடவே அவளும் அங்கு வருவாள்..!நான் ரேஷன் கடைக்கு சென்றால்.. அவளும் அங்கு வருவாள்..!நான் குளத்திற்கு குளிக்க சென்றாலும் அவளும்.. அங்கு குளிப்பதற்கு வருவாள்..!நான் கோவிலுக்கு சென்றாலும்.. அவளும் அங்கு வருவாள்..! தினமும் என் கண்களில் தென்படுவாள்..!தினமும் அவள் என்னை பார்பாள்.. புன்னகை செய்வாள்..ஆனால்என்னிடம் பேசியது மட்டும் கிடையாது..!எனக்கு ஒரு சந்தேகம் வந்தது..!ஒரு வேளை நம்மை விரும்புகிறாளோ..? என்று..!ஒரு நாள் அவளிடம் கேட்டே.. விட்டேன்..! " என்னை நீ விரும்புகிறாயா.."? என்று..!அவள் அதற்கு ஒன்றும் பேசாமல் நின்றாள்..! பிறகு சொன்னாள்.." ஒரு மாதம் கழித்து சொல்கிறேன்.."!என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்..! எனக்கு ஒரு மாதம் என்பது.. ஒரு யுகம் போல் தெரிந்தது..! என் மனதிற்குள் பட்டாம்பூச்சிகள்.. சிறகடித்து பறந்தன..! சாப்பிட பிடிக்க வில்லை..!தூக்கம் வரவில்லை..! ஆனாலும் ஒரு பதற்றம்.. அவள் காதலை சொல்லாமல் வேறெதுவும்.. சொல்லி விடுவாளோ..? இல்லை..இல்லை.. அப்படி சொல்லி விட மாட்டாள்..!நம்பிக்கை இருந்தது..!ஒரு மாதமும் ஆனது.. நான் மிகுந்த எதிர் பார்புடன் இருந்தேன்..!ஒரு நாள் ஓர் இடத்தில் என்னை சந்தித்தாள்..! சிறிது நேரம் எதுவும் பேசவில்லை..! வெட்கம் அவள் முகத்தில் நன்றாக தெரிந்தது..!நான் கேட்டேன்.. " சொல்.. என்ன சொல்ல போகிறாய்.."? என்று..!.....மன்னிக்கவும் இந்த கதையை.. என்னால் இதற்கு மேல் தொடர முடியவில்லை..!காரணம்.. நான் இரண்டு ரூபாய்க்கு.. வாங்கி தின்ற பிட்டு.. சுண்டல் பேப்பரில் இவ்வளவு தான் இந்த கதை இருந்தது..!படுபாவி பய.. சுண்டல் காரன்.. இக்கதையை பாதியாக கிழித்து.. எனக்கு சுண்டல் மடித்து.. கொடுத்து விட்டான்..!மீதி கதையை யார் படித்தார்கள் என்று தெரியவில்லை..!நீதி;- அதிகமான விலைக்கு சுண்டல் வாங்கவும்.. முழு கதைகளை படிக்கவும்.
எனது ஊரில் நடைபெற்ற.. ஒரு சம்பவம்!!
Written By M.L on திங்கள், 15 செப்டம்பர், 2014 | செப்டம்பர் 15, 2014
Popular Posts
-
✍அழகான வரிகள்.... வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை.. நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினை...
-
இயக்குநர் மணிவண்ணனிடம்.. உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இயக்குநர் விக்ரமன் அவர்கள். பின்னாளில்,விக்ரமன் இயக்கத்தில் சூர்யவம்சம் போன்ற படங்...
-
ஒருவர் ஒரு டெலிஃபோன் கம்பெனி அலுவலகத்தின் முன் சாகும்வரை உண்ணாவிரதமிருந் தார். பத்திரிகை நிருபர்கள் அவரிடம் பேட்டி எடுத்தனர். நிரு: எதற...
-
டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள்...
-
*பப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு; சாப்பிட்டு தெம்பா இருங்க…*♨ ** இதயத்திற்கு நல்லது. ** மனநோய்களைக் குணமாக்குவதில் உதவ...
-
தாலியை கழற்றி எறிவது பெண்ணிற்கு அறிவு வந்துவிட்டதற்கான அடையாளம் என்று சொல்ல மிருகபுத்திரனுக்கு என்ன அருகதை இருக்குனு தெரியலை. ஒரு சமூகத்தின...
-
உங்களுக்குத் தெரியுமா? ஒரு நெல்லிக்காயில் இருநூற்று முப்பது ஆரஞ்சுப் பழங்களின் வைட்டமின் சி சத்து இருக்கிறது.*♨ இலை, பட்டை.வேர், ...
-
Read this if u are free and have no work for the next half hour. ADVENTURES OF AN UNFORTUNATE OPPICER – PART I No. It is not ‘officer’....
-
திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூ...
-
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 1.ஆசிரியர் வருகைப் பதிவேடு 2.மாணவர் வருகைப் பதிவேடு 3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு 4.சேர்க்...
0 comments:
கருத்துரையிடுக