சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யும் போது, சாட்சியாக வருவோரின் புகைப்படம், கைரேகை பதிவு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்குவருகின்றன.
பத்திரப் பதிவின் போது, விற்பவர், வாங்குபவர் மற்றும் அவர்கள் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக கையெழுத்திடவேண்டும்.சில சமயங்களில் விற்பவர் அல்லது வாங்குபவர் தரப்பில் யாரும் வராத நிலையில், ஆவண எழுத்தர், அலுவலக ஊழியர்கள் யாராவது, சாட்சியாக கையெழுத்திடுவர். வீடு, மனை விற்பனை தரகர்களும் சாட்சியாககையெழுத்து போடுவர்.
சார் - பதிவாளர் அலுவலகங்களில், இது போன்று சாட்சி கையெழுத்து போடுவதற்காகவே, சிலர் வலம் வருகின்றனர்.ஒரே நபர் தொடர்ந்து பல பத்திரங்களில் சாட்சியாக வருவது வாடிக்கை யாகி விட்டது. இது, மோசடிக்கு வழி வகுப்பதாக பதிவுத்துறை கண்டுபிடித்துள்ளது. அதனால், பத்திரப் பதிவுக்கான சாட்சிகள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய, புதிய கட்டுப்பாடுகளை, அரசுஅறிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் விபரம்
*பத்திரங்களை பதிவு செய்யும் போது,சாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கைரேகை யையும் பதிவு செய்ய வேண்டும். சாட்சியாக வருவோரின் அடையாள ஆவணத்தையும், தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
*ஒரே நபர், தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் கையெழுத்திட, சார் - பதிவாளர் அனுமதிக்கக் கூடாது.அவசியம் ஏற்பட்டால், மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.
இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
Home »
தகவல்
,
General Tips
» சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யு புதிய கட்டுப்பாடுகள்!
சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யு புதிய கட்டுப்பாடுகள்!
Written By M.L on புதன், 8 ஏப்ரல், 2020 | ஏப்ரல் 08, 2020
Popular Posts
-
குட்டி கதை...!!! ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ...
-
குட்டிக்கதை: ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய்கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா ...
-
மரச்சீனி அல்லது மரவள்ளி கிழங்கு என அழைக்கப்படும் இவ்வகை கிழங்குகள் ஒரு முக்கிய உணவு பயிராக காணப்படுகிறது. இவை குமரி மாவட்டம் மட்டுமின்றி...
-
1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்...
-
மரியாதை மிக்க மனைவி’. கடினமாக உழைக்கும் ஒருவன் நிறைய சம்பாதித்து பணம் சேர்த்து வந்தான்...அவனுக்கு பணம் சேர்ப்பது கொள்ளை பிரியம்.. ஒரு ...
-
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க... மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூ...
-
I am developing one Windows Forms Application in C# and I require to covert the Word (.docx) file to XML and saved it to SQL Server Database...
-
Life is full of turn .. never give up never return .. ! THE PREGNANT DEER SCENARIO... In a forest, a pregnant deer is about to give birth t...
-
ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார...
-
பிரதமர், எங்களை தூய்மையாக இருக்கச் சொன்னார், இருக்கிறோம்! கைகழுவச் சொன்னார், கழுவினோம்! தள்ளி நிற்கச் சொன்னார், நிற்கிறோம்! வீட்டிலேயே இருக...
0 comments:
கருத்துரையிடுக