Home »
Agriculture tips
,
Health Tips
,
Knowledge sharing-GK
,
Live Life Article
,
Vivasayam tips
» இலை மடக்குப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்
இலை மடக்குப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்
Written By Unknown on புதன், 9 டிசம்பர், 2015 | டிசம்பர் 09, 2015
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது இலை மடக்குப்புழு ஆகும். தற்போது மழை பெய்துள்ளதாலும், நெற்பயிர் வளர்ச்சிப் பருவத்தில் இருப்பதாலும் இதன் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது.அறிகுறிகள்தாய் அந்துப்பூச்சிகள் இடுகின்ற முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளை நீளவாட்டில் மடித்து சேதப்படுத்துகிறது. மடிக்கப்பட்ட இலைகளுக்குள் இந்த புழுக்கள் இருந்துகொண்டு பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளில் சேதம் அதிகரிக்கிறது. தாக்கப்பட்ட இலைகள் வெளிறித் தோன்றுவதுடன் பயிரின் ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றி விடுகிறது.பயிர் வளர்ச்சிக் காலத்தில் பத்து சதவீத இலைச்சேதம், பூக்கும் தருணத்தில் கண்ணாடி இலைகளில் ஐந்து சதவீத சேதம் என்ற அளவை அடையும்போது பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.மேலாண்மை முறைகள்*பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரமிட வேண்டும். *இலை மடக்குப்புழுவின் அந்துப்பூச்சிகள் இரவு நேரத்தில் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்படுகிறது. எனவே, முன்னிரவு நேரங்களில் விளக்குப் பொறிகளுக்கு கவரப்படுகின்ற தாய் பூச்சிகளை அழிக்கலாம்.*தேவைக்கு ஏற்ப தழைச்சத்து இட வேண்டும். இதன் தாக்குதல் அதிகமாக தோன்றும் இடங்களில் ரசாயன உரங்களை தவிர்த்து இதன் சேதத்தை குறைக்கலாம். தழைச்சத்தின் தேவையை தொழுஉரம் அல்லது பசுந்தாள் உரமாக இடுவதன் மூலம் இப்பூச்சியின் பெருக்கம் தவிர்க்கப்படுகிறது.*இலைமடக்கு புழுவின் முட்டை ஒட்டுண்ணி, கூட்டுப்புழு ஒட்டுண்ணிகள், புழுப்பருவ ஒட்டுண்ணிகள் இதனை தாக்குகின்றன். மேலும், ஓநாய் சிலந்தி போன்ற சிலந்தி வகை ஊன் விழுங்கிகளும் இப்புழுவைத் தாக்குகிறது. முட்டை ஒட்டுண்ணியான, டிரைகோகிரம்மா கைலோனிஸ் ஒரு ஹெக்டேருக்கு 5 சி.சி என்ற அளவில் நட்ட 37, 44 மற்றும் 51-ம் நாட்களில் விட வேண்டும்.*இதன் தாக்குதல் பொருளாதார சேதநிலையை அடையும்போது ஹெக்டேருக்கு கீழ்க்காணும் பூச்சிக்கொல்லி மருந்து ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.1000 கிராம் குளோர்பைரிபாஸ் 20 ஈசி 1250 மில்லி அல்லது அசாடிராக்டின் 0.03 சதவீதம் 1000 மில்லி (அ) கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதவீதம் எஸ்.பி 1000 கிராம் (அ) டைகுளோர்வாஸ் 76 சதவீதம் 627 மில்லி (அ) பிப்ரோனில் 80 சதவீதம் டபுள்யுஜி 50-6 2.5 கிராம்.மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த முறைகளைக் கையாண்டு இலை மடக்குப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்று, வேளாண்மை இணை இயக்குனர் ப.இளங்கோ தெரிவித்துள்ளார்.
Popular Posts
-
குட்டிக்கதை: ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய்கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா ...
-
மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள் ! 1. மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய் சாந்தனுவாய் 2. சத்தியம் செய்துவிட்டால், ...
-
குட்டி கதை...!!! ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ...
-
நெத்தியடி! ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆ...
-
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க... மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூ...
-
I am developing one Windows Forms Application in C# and I require to covert the Word (.docx) file to XML and saved it to SQL Server Database...
-
ஒர் #பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்...
-
ONLY A MOTHER WOULD KNOW... ~A Cup of Tea ~ One day my mother was out, and my dad was in charge of me. I was maybe 2 1/2 years old. So...
-
தமிழகத்தில் கட்டணமில்லா முக்கிய தொலைபேசி எண்கள்.. 1 முதலமைச்சர் அலுவலகம் 044-25672510 2 சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறை 044-284472...
-
நீண்ட நெடிய பாரம்பரியத்தை குறிப்பிடும் போது வாழையடி வாழையாக என கூறுவது உண்டு. கி.மு. நான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாவீரன் அலெக்சாண்டரின் ...
0 comments:
கருத்துரையிடுக