பழசை மறந்துடக்கூடாது !!!விவசாயி ஒருவர் தன் பண்ணையில் ஆயிரம் பசுக்களை வளர்த்தார். அவை நன்றாகப் பால் கறந்தன. கிடைத்த வருமானத்தில் பெரிய வீடு கட்டினார். மகளை பெர...ிய இடத்தில் கட்டிக் கொடுத்தார். இரண்டு மகன்களை படிக்க வைத்தார். அந்தப் பிள்ளைகள் பொறுப்பானவர்கள். பசுக்களுடன் அவர்கள் அன்பாக இருந்தனர்.காலம் கடந்தது. பண்ணையில் இருந்த சில பசுக்களிடம் பால் வற்றி விட்டது. அவை கிழடாகி விட்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்ட விவசாயி, மனைவியை அழைத்து,""அடியே! சில மாடுகள் கிழடாகி பால் குறைந்துவிட்டது. அதை அடிமாட்டுக்கு அனுப்பி விட வேண்டியது தானே! பணமும் கிடைக்கும்,'' என்றான். அவளும் ஆமோதித்தாள்.இதை பிள்ளைகள் கேட்டனர். தந்தையிடம் சென்றனர். ""அப்பா! வயதாகி விட்டால் எதற்குமே நாம் பயன்பட மாட்டோமா?'' என்றனர். ""அதிலென்ன சந்தேகம்! நிற்கக் கூட முடியாது. கால்கள் தள்ளாடும், கைகள் நடுங்கும், '' என்றார் தந்தை. ""அந்த நேரத்தில் நம்மை யார் காப்பாற்றுவார்கள்?'' என்ற பிள்ளைகளிடம், ""அவரவர் வளர்ச்சிக்கு காரணமானவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.உதாரணத்துக்கு எனக்கு வயதாகி விட்டால், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்'' என பதிலளித்தார். ""அப்பா! நம் மாடுகள் கிழடாகி விட்டாலும், அவை இதுவரை நம்மோடு வாழ்ந்து பால் தந்து நம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளன. அவற்றை மட்டும் கொல்ல வேண்டும் என்கிறீர்களே! இது என்ன நியாயம்! நம்மைப் போல நம் வளர்ச்சிக்கு காரணமான அந்த விலங்குகளையும் நேசிக்க வேண்டுமல்லவா!'' என்ற பிள்ளைகளின் பேச்சு, விவசாயியின் மனதில் சம்மட்டி அடியாய் விழுந்தது.மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு தனியிடத்தில் கட்டி வைத்து, அவை இயற்கையாக மரணமடையும் வரையில் பராமரித்து வந்தார்.நன்றி :
Home »
Positive thoughts
» பழசை மறந்துடக்கூடாது ?
Popular Posts
-
✍அழகான வரிகள்.... வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை.. நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினை...
-
இயக்குநர் மணிவண்ணனிடம்.. உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இயக்குநர் விக்ரமன் அவர்கள். பின்னாளில்,விக்ரமன் இயக்கத்தில் சூர்யவம்சம் போன்ற படங்...
-
உங்களுக்குத் தெரியுமா? ஒரு நெல்லிக்காயில் இருநூற்று முப்பது ஆரஞ்சுப் பழங்களின் வைட்டமின் சி சத்து இருக்கிறது.*♨ இலை, பட்டை.வேர், ...
-
திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர். அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூ...
-
உங்கள் ஆதார் கார்டில் வீட்டு முகவரி மாற்ற வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று தெரியவில்லையா இனி கவலையை விடுங்கள், நீங்கள் உங்கள் வீட்டில் இர...
-
*பப்பாளியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கு; சாப்பிட்டு தெம்பா இருங்க…*♨ ** இதயத்திற்கு நல்லது. ** மனநோய்களைக் குணமாக்குவதில் உதவ...
-
பிரதமர், எங்களை தூய்மையாக இருக்கச் சொன்னார், இருக்கிறோம்! கைகழுவச் சொன்னார், கழுவினோம்! தள்ளி நிற்கச் சொன்னார், நிற்கிறோம்! வீட்டிலேயே இருக...
-
தாலியை கழற்றி எறிவது பெண்ணிற்கு அறிவு வந்துவிட்டதற்கான அடையாளம் என்று சொல்ல மிருகபுத்திரனுக்கு என்ன அருகதை இருக்குனு தெரியலை. ஒரு சமூகத்தின...
-
We are testing the compatibility of asp.net application with multiple browsers / devices. We’re experiencing some alignment issues on the i...
-
I am facing below error while running the asp .net mvc 3.0 based web base application using IIS 7.5. Error Summary: “HTTP Error 401.0 - Un...
0 comments:
கருத்துரையிடுக